இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் சுமார் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கட்டணமாக செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிருப்தியடைந்த அந்நாட்டு மக்கள், அதிபருக்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். மக்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்ததையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.
இதனையடுத்து சிங்கப்பூரில் உள்ள மரினா பே சேண்ட்ஸ் விடுதியில் தனது மனைவியுடன் தங்கியிருந்தனர். இதேவேளை, விடுதி தங்குமிட கட்டணமான 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…