Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தக்காளி விலை 2 மடங்கு உயர்வு.. கண்ணீர் வடிக்கும் குடும்பஸ்தர்கள்!!

Sekar September 03, 2022 & 10:32 [IST]
தக்காளி விலை 2 மடங்கு உயர்வு.. கண்ணீர் வடிக்கும் குடும்பஸ்தர்கள்!!Representative Image.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனையாகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. நேற்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தன. 

இதனால் கடந்த வாரங்களில் மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.20க்கு விறபனையான தக்காளி நேற்று ரூ.40க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தக்காளி விலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், குடும்பஸ்தர்கள் கவலை அடைந்து உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்