அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவில் இதுவரை இருந்து வந்த ஒருங்கிணைப்பாளர் மற்ரும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விதிகளிலும் திருத்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…