ஆர்ப்பாட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி திடீரென மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவை கடுமையாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்தார். மேலும், திமுக அரசோடு எட்டப்பர்களாக செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து கூண்டோடு நீக்கி உள்ளோம். துரோகிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம் என காட்டமாக பேசினார்.
அதன் பின்னர், மேடையில் நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…