ஈரோட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்றைய தினம் ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பயங்கரவாதத் தொடர்புகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆவணங்கள், ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள், டைரிகள், சிம் கார்டுகள் மற்றும் வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றையும் என்ஐஏ கைப்பற்றியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ஒருவரிடம் விசாரணை நடத்தியதில், மேலும் இருவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…