ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அளித்துள்ள 71 பக்க அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிபதி சந்துரு தலைமையிலான குழு சமர்பித்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகளால் திறன் மேம்படுவதாக சொல்வது தவறானது என்றும், கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் உடல்நலன் ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்படுகிறது என்றும், இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டத்தை கைவிட்டு புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் கொண்டு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…