மாஸ்க் இல்லாமல் சுற்றினால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 69 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:- மனதை மயக்கும் மாலத்தீவு…! அதிலும் இந்த இடத்துக்கு போனா திரும்ப வரவே மனசு வராது…!
இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து மதுரையில் மாஸ்க் இல்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன்ங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…