சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க வரும் பிரதமர் மோடியை இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியே வரவேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். போட்டியை துவக்கி வைத்த அவர் இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மேலும் நாளை சென்னை அண்ணா பல்கலைகழக 42 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொணு சுமார் 69 பேருக்கு தங்க பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கவுள்ளார். பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியே வரவேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஐஎன்எஸ் அடையாறில் ஓ.பன்னீர்செல்வமும் வரவேற்கின்றனர். தி.மு.க., அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தில், பழனிசாமி முன்னிலையில், பன்னீர்செல்வத்தை எதிர்த்தே பலரும் பேசினர். இதன் வாயிலாக, பிரதமர் முன்னிலையில் சமரச பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை என்றும், அப்படியே நடந்தாலும் பழனிசாமி அதற்கு உடன்பட மாட்டார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…