அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை வானகரத்தில் நடக்கும் பொதுக்குழுவிற்கு இபிஎஸ் தரப்பினர் பிரம்மாண்ட ஏற்ப்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க வேனில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக வேன், கண்டெய்னர் லாரி மீது மோதியதில், 15க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்கு சென்ற இபிஎஸ் ஆதரவாளர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…