ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாடக்ளுக்கு முன், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்சியை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருமுட்டை தானம் குறித்த சாதக, பாதகங்கள் சிறுமியிடம் முறையாக விளக்கப்படவில்லை என்றும், கருமுட்டை தானம் பெற போலியான கணவரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,சிறுமி கருமுட்டை விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட 4 மருத்துவமனைகளையும் 15 நாட்களில் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், சிறுமிக்கு, தகுந்த கல்வி தகுதி இல்லாதவர் ஆலோசகராக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை என்றும், கருமுட்டை முறைகேட்டில் ஈடுபட்ட ஈரோடு சுதா, ஓசூர் விஜய் மருத்துவமனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…