முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக- வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பெற்றுக்கொண்டதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவது, செய்தியாளர்கள் சந்திப்பு என பிஸியாகவே இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு அமைந்தகரை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச்செய்தி அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…