கண்ணி வெடிகள் அகற்றப்பட்டால் கப்பல்கள் சுதந்திரமாக அங்கிருந்து வெளியேறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் ரஷ்ய தூதர் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக பல ஐரோப்பிய நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு தட்டுப்பாட்டை போக்க உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன.
ரஷ்யாவும் துருக்கியும் கருங்கடலில் வழித்தடத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக உறுதி கொடுத்தன. இதில் உக்ரைன் தன் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா கோரியுள்ளது. மேலும் உக்ரைன் ஏற்றுமதியை அனுமதிக்க ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்தியப் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வேண்டும் என்று துருக்கி கோரியுள்ளது. இது தொடர்பாக பேசிய உக்ரைன் தரப்பினர் கடலில் கண்ணி வெடிகளை வைத்தது நாங்கள் அல்ல ரஷ்யர்கள் தான் வைத்துள்ளனர். அந்த கண்ணி வெடிகளை அகற்ற குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் கிழக்கே அமைந்துள்ள நகரங்களின் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கிழக்கை பாதுகாக்க மேற்கத்திய நாடுகள்தான் உதவ வேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைனில் பீரங்கி போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஒரு பீரங்கிக்கு எதிராக ரஷ்யாவிடம் 10-15 பீரங்கிகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…