உக்ரைனில் மாஸ்கோவின் போருக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதைக் குறிக்கும் வகையில், ரஷ்யா-சீனாவுக்கு இடையிலான முதல் சாலை பாலம் திறக்கப்பட்டுள்ளது.
அமுர் ஆற்றின் குறுக்கே, 19 பில்லியன் ரூபிள் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் சுமார் 1 கி.மீ. நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க்கை வடக்கு சீனாவின் ஹெய்ஹேவுடன் இணைக்கிறது. இரு நாடுகளின் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாலத்தில் வானவேடிக்கை காட்சிக்கு நடுவில் இரு முனைகளிலிருந்தும் சரக்கு வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன.
மேலும் சீனா-ரஷ்யா ரயில் பாலம் நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லாங்ஜியாங்கில் உள்ள டோங்ஜியாங் நகரத்தையும் ரஷ்ய நகரமான நிஸ்னெலெனின்ஸ்காய்யையும் இணைக்கிறது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…