காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய நீர்வளத்துறை கூறியுள்ளது.
மேலும் குளிக்கவோ, ஆடு, மாடுகளை வைத்துக்கொண்டோ ஆற்றில் இறங்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 47,436 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 1957ம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக மே மாதத்தில் அணைக்கு வரும் நீரின் அளவு இப்போதுதான் 40,000 கன அடிக்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 113.66 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…