இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கப்படாது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ரயில்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே துறையை உலக தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றார். வந்தே பாரத் ரயில்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்படுவது பெருமையாக உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ரயில்வே துறையை முன்னேற்றி தரமான ரயில்கள் மூலமாக பயணிகளுக்கு நல்ல பலன் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…