தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததாக் மனமுடைந்த விவசாயி 145 தென்னை மரங்களை வெட்டி சாய்த்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழதிருப்பூந்துருந்தி பகுதியைச் சேர்ந்தவர் என்.ராமலிங்கம்(57). இவர் கண்டியூரில் உள்ள தனக்குச் சொந்தமான 2 ஏக்கரில் தென்னந்தோப்பு வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய் விலை வீழ்ச்சியடைந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் மனமுடைந்த அவர் தோப்பில் இருந்த 145 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார். இதனையடுத்து அங்கு வாழை, கத்தரி, கீரை போன்ர மாற்று பயிர்களை செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குழந்தை போல பார்த்து பார்த்து வளர்த்த மரத்தை வெட்டுவது மன வேதனையாக இருப்பதாக கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…