கோவை குற்றாலம் மற்றும் ஆழியாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோயம்புத்தூர் அடுத்த சாடிவயல் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரிகள்; மேற்கு தொடர்சி பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அங்கு வீசும் பலத்த காற்று காரணமாக பயணிகள் மீது மரங்கள், கற்கள், பாறைகள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணிகள் நலன் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேபோல் ஆழியாறு பகுதிகளில் உள்ள அருவியிலும் தடை விதிக்கப்ப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…