ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவப்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ரமேஸ்வரம் அடுத்த வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அடையாளம் தெரியாத வகையில் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வட மாநில இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வடகாடு மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த மீனவப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…