சிதம்பரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் உபரி நீர் காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுபணித்துறையினர் சிதம்பரத்தில் 10 கிராமங்களுக்கு மேல் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…