பம்பை நதியில் வெள்ளப்பெருக்க் காரணமாக பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி வருகினன. இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அதன் காரணமாக, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இன்று 3 மணிக்கு மேல் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே தரிசனத்துக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் மாலை 6மணிக்குள் சபரிமலையில் இருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…