ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறிழைத்து கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமையை ஈபிஎஸ் ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறிழைத்து கொண்டிருக்கிறார், அதிமுக ஜனநாயகம் மலர்ந்த அமைப்பு இங்கு அராஜகத்திற்கு இடமில்லை என பேட்டியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பொதுக்குழுவில் பங்கேற்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…