ஃப்ளோரிடாவில் உள்ள தனது வீட்டில் FBI அதிகாரிகள் முற்றுகையிட்டு அத்துமீறி சோதனை நடத்தி வருவதாகவும் தனது வீட்டில் இருந்த லாக்கரை உடைத்ததாகவும் அமெரிக்க முன்னாள் அதிபர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தனது புளோரிடா வீட்டில் FBI சோதனை நடத்தியதாக கூறினார். "புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள எனது அழகான வீடு FBI அதிகாரிகளால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது. என்றும் முற்றுகையிட்டவர்கள் தனது வீட்டில் இருந்த லாக்கரை உடைத்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் 2024 ஆம் ஆண்டில் மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், அவர் மீதான இந்த சோதனை அமெரிக்காவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…