திருநங்கைகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் இலவச கல்வி வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், தமிழ்நாடு மாணவர்கள் அனைத்து துறைகளிலும் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திருநங்கைகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது. எனது ஆட்சியில் உயர் கல்வியின் பொற்காலமாக ஆக வேண்டும் எனத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என, தெரிவித்தார் இந்த அறிவிப்பினால் தமிழ்நாட்டுத் திருநங்கைகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…