ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. rte.t schools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் மே 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் மே 24 வரை 1.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் தகுதியானவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…