அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு தான் இருப்பதாக சசிகலா கூறியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா; எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருக்கிறது; அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது; அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை; ஒரு சிலர்தான் பேசுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய சசிகலா; அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை; அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்; யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது; என்னை கட்சியில் இணைக்கமுடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்.? எனக் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…