மது பாட்டிலுக்குள் குட்டி தவளை கிடைந்த சம்பவம் மதுப்பிரியர்களிடையே கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்த 51 வயதான பாண்டி என்பவர், சித்தரேவு பகுதியிள் உள்ள அரசு மதுபானக்கடைக்கு சென்று, ஒரு குவாட்டர் வாங்கியுள்ளார். இதனையடுத்து அந்த பாட்டில் எதோ மிதப்பதை உணர்ந்த அவர், அருகில் உள்ளவரிடம் காண்பித்து கேட்டுள்ளார், அவர்கள் தவளை தான் உள்ளே இருக்கிறது என கூறியதால் கோபமடைந்த பாண்டி, கடை ஊழியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து கடை ஊழியர் வேறு பாட்டில் கொடுப்பதாக டீல் பேசிய நிலையில், அதனை மறுத்த பாண்டி பாட்டிலை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
மது பாட்டில் தவளை கிடைந்த சம்பவம் அப்பகுதி மதுப்பிரியர்களிடம் கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…