கடந்த சில நாட்களுக்கு முன் ''பெரியார் சிலையை உடைப்பேன்'' என திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களில் எழுச்சி நாளாக இருக்கும் என கூறினார்.
மேலும், இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், கைதுக்கு பயந்து கனல்கண்ணன் தலைமறைவானார்.
இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனல் கண்ணன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதால் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த கனல்கண்ணனை சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…