அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் உள்ள ஒரு கோவிலில் இருந்த மகாத்மா காந்தி சிலை கடந்த செவ்வாய் கிழமை சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்களில் இது இரண்டாவது சம்பவம் என்றும், ஸ்ரீ துளசி மந்திருக்கு வெளியே இருந்த காந்தி சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, ஆபாச வார்த்தைகளால் சிதைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் , இந்த இரண்டு சம்பவங்களும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் குற்றங்கள் என்றும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…