உத்திரபிரதேசத்தில் உணவகம் ஒன்றில் சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கொடுத்த விவகாரம் தொடர்பாக வாடிக்கையாளரை உணவக உரிமையாளர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், ஜலான் மாவட்டத்தில் ராம் சிங் என்பவர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் ராம்ஜி என்பவர் பிரியாணி சாப்பிட வந்துள்ளார். இந்நிலையில் முதலில் சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கொடுத்தது தொடர்பாக இருவருக்கு வாய் தகராறு ஏற்ப்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தைல் மோதலாக வெடித்த நிலையில் ராம் ஜி என்பவரை ராம் சிங் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராம்ஜி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், வாடிக்கையாளர் ராம் ஜி முதலிலையே காசு கொடுத்துவிட்டு பிரியாணி சாப்பிட்டதாகவும், ஆனால் கடையின் உரிமையாளர் ராம் ஜி காசு கொடுக்கவில்லை எனக்கூறி தாக்கியதாக காயமடைந்த நபர் கூறியுள்ளார். மேலும் சம்பவத்தன்று இருவருமே போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…