அரியலூர் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு கிப்ட் பாக்ஸ் வழங்கிய போலிசார்.
அரியலூர் மாவட்ட காவல் துறை மற்றும் ஜெயங்கொண்டம் ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் சாரான இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கியவாறு சென்றனர். ஊர்வலத்தின் போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் மூலம் வழங்கப்பட்ட கிப்ட் பாக்ஸினை கொடுத்து வாகன ஓட்டிகளை போலிசார் ஊக்குவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…