திண்டுக்கல்லில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 மனி நேரத்திற்குள் சுமார் 2 கோடி வர்த்தகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் அதிகாலை 4 மணி முதல் களைகட்டி இருக்கும். இந்த சந்தையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வியாபாரிகள், விவசாயிகள், கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தை தொடங்கி 5 மணி நேரத்திற்குள் சுமார் ரூ. 2 கோடி வர்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் 15 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.16 முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகை எதிரொலியாக செம்மறி ஆடுகளுக்கு அதிக லாபம் கிடைத்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…