கேரளாவில் 300 கிலோ எடை கொண்ட மரத்தை இளைஞர் ஒருவர் அசால்ட்டாக தோளில் தூக்கி நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளவின் இடுக்கி அருகே உலா தோப்புறான்குடி பகுதியில் மரத்தின் அடிப்பகுதியை தூக்கி நடந்து செல்லும் ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதீஷ் என்ற இளைஞர், 300 கிலோ எடை கொண்ட மரத்தின் அடிப்பகுதியை அசால்ட்டாக தனது தோளில் வைத்து, 73 மீட்டர் நடந்து சென்றார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
மேலும், பாகுபலி படத்தில் பிரபாஸ் சிவ லிங்கத்தை தோளில் தூக்கிச் செல்வது போல இருக்கும் காட்சியை ஒப்பிட்டு, இவர் தான் நிஜ பாகுபலி என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…