கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பல பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட 35 ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் - திருநெல்வேலி (06405/06409), மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை (06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
திருச்சி - ஈரோடு (06809/06810), திருச்சி - ஈரோடு(06611/06612) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 9-ம் தேதியில் இருந்தும், அரக்கோணம் - கடப்பா (06401/06402), கோவை - சேலம் (06802/06803), திருச்சி - கரூர்(06881/06882), சேலம் - கரூர் (06821/06822) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 27-ம் தேதியில் இருந்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…