ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் லட்சத்துடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்தது. இந்த நிலையில், இந்தியாவின் வெற்றியை பாராட்டும் விதமாக கூகுள் சிஇஓ சுந்தர பிச்சை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் போட்ட டிவிட் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய், ரஜினி படங்களில் பணிபுரிந்த பிரபல கலை இயக்குனர் T.சந்தானம் திடீர் மரணம்...
அந்த பதிவில், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் கடைசி 3 ஓவரை மட்டும் மீண்டும் கண்டு களித்து என்னுடைய தீபாவளியை கொண்டாடினேன். இந்தியாவின் சிறந்த ஆட்டம் இது என்று பாராட்டியிருந்தார்.
சுந்தர் பிச்சையின் இந்த டிவிட்டை பார்த்து கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்களில் ஒருவர் இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித், ராகுல் ஆகியோர் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்ததை கிண்டல் செய்யும் விதமாக இந்தியாவின் முதல் 3 ஓவர்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.
இன்னைக்கு நம்ம ஊருலியே சூரிய கிரகணத்தை பார்க்கலாம் இந்த நேரத்துக்கு..
இதற்கு பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை, இந்தியாவின் முதல் 3 ஓவர்களை பார்த்தேன். ஆர்ஸ்திப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசினர். மேலும், இந்தியாவின் தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததை கிண்டல் செய்த பாகிஸ்தான் ரசிகருக்கு, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாம் டக் அவுட் ஆனதையும், ரிஸ்வான் 4 ரன்களில் ஆட்டமிழந்ததையும் மறைமுகமாக கூறி, சுந்தர் பிச்சை தக்க பதிலடி கொடுத்துள்ளார். சுந்தர் பிச்சையின் இந்த பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…