ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி நடைபெறும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்குகிறது. இதில் 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா். இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/playersல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்றிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் தீபம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மாமல்லபுரத்திலிருந்து எடுத்து செல்லப்படும் ஒலிம்பியாட் தீபம், அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சென்னை கொண்டுவரப்படவுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…