அரசுப்பள்ளி ஆசிரியையை மற்றொரு ஆசிரியை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், நேற்று காலை பள்ளியில் இறை வணக்கம் நடந்து கொண்டிருந்த நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த உடற்கல்வி ஆசிரியையை கீதா ரமணியை பட்டதாரி ஆசிரியை பிரியா செருப்பால் அடித்துள்ளார். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து பள்ளி வாசல் முன்பு பெற்றோர்கள் குவிந்ததால், தகவல் அறிந்து வந்த கல்வி அதிகாரிகள், இரு ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடந்துள்ளது. அவர் அறிக்கைக்கு பிறகே, நடவடிக்கை தெரியவரும்' என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…