இந்தியாவின் முதல் முறையாக தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் பிந்து.
குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து, "திருமணத்தின் மீது விருப்பமில்லை. ஆனால் மணமகளாக வேண்டும் என விரும்பினேன்” என்று கூறியிருந்தார். இவரது சுய திருமணத்திற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், ஷாமா பிந்து எதிர்ப்புகளை மீறி இன்று (9ம் தேதி) இந்து மதத்தின் சடங்குகளைச் செய்து தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார். இந்தப் புகைப்படம் வைரலாகிறது.
இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது என்றும், ஷாமா பிந்துவை கோவிலில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார். மறுபுறம், காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா, அவரது திருமணம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என கடுமையாக விமர்சித்தார். பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அவருக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…