முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா யாதவ் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா யாதவ் காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் குரு கிராமுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகக் கூறப்படுகிறது.முன்னதாக முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அவரைப் பார்க்க வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தா, அவரை விட 20 வயது இளையவர். அவரது மகனின் பெயர் பிரதீக் யாதவ், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அபர்ணா யாதவ் அவரது மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…