இந்தியாவின் பிரபல வங்கியான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர் கணக்கில் தலா ரூ.13 கோடி வரவு வைத்ததால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை தி நகரில் உள்ள எச்டிஎப்சி வங்கியின் கிளையில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும் இது குறித்து பின்னர் விசாரிக்கையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக 100 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.13 கோடி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் விஷயம் அறிந்த உடன் அந்த வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…