தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தும் திட்டங்களை மேற்பார்வையிட புதிதாக சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேலும் செம்மைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
எனவே இந்த திட்டங்களை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக தொகுப்பூதிய அடிப்படையில் சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்தது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 3 இளநிலை அலுவலர்கள் என மொத்தம் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைமை அலுவலர்களுக்கு ரூ.45 ஆயிரம், இளநிலை அலுவலர்களுக்கு ரூ.32 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…