அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாம் என உயர்நீதிமன்றன் அளித்த தீர்ப்பு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜுலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜுன் 23- ஆம் தேதிக்கு முன்னதாக் இருந்த நிலையே கட்சியில் தொடரும் எனவும் தீர்ப்பளித்திருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…