கனமழை காரணமாக நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 3 அதிகனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட் ) விடுக்கப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அமிர்த் அறிவித்துள்ளார். மேலும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் நீலகிரிக்கு வருகை தந்திருக்கின்றனர். மீட்பு முகாம்களும் தயார்நிலையில் இருக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…