மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால், அங்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
தமிழகம் முழுவதுமே நேற்று இரவு முதல் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து சில மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், இன்றும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி மதுரையில் பெய்த கனமழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…