தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல 2,300 வரையும்,
சென்னையில் இருந்து கோவை செல்ல 1000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மதுரை, நெல்லைக்கு செல்ல நபர் ஒன்றுக்கு 3,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள பயணிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…