தக்காளியை வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு வாங்குவதாக கூறி தக்காளியை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றனர்.
கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஆண்டுதோறும் 60 டன் தக்காளி பயிரிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விவசாயிகள் ஆர்வமுடன் தக்காளியை சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் விளைச்சல் அதிகரிப்பாலும், வாங்க ஆட்கள் இல்லாததாலும் தக்காளி விலையைஒ வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு வனக்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தக்காளியை சாலையில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்த
கோவையை சேர்ந்த ஆர்.பெரியசாமி என்ற விவசாயி, ஏக்கருக்கு 75,000 ரூபாய் வரை செலவழித்தோம். ஆனால் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையானால், அதைக் கொட்டுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என தெரிவித்தார்.
மேலும், இடைத்தரகர்கள் அல்லது சந்தை முகவர்களை அணுகாமல், நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கிலோ ரூ.15க்கு மேல் விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…