தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவரை காதலித்து வந்தார் தினேஷ். இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் கார்த்திகாவின் பெற்றோர் இவர்களின் காதலை ஏற்கவில்லை. ஆனால் தினேஷின் பெற்றோர் அவர்களின் காதலை முழுமையாக ஏற்றுக்கொண்டனர். எனவே, பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் இருக்கும் மிகவும் ப்ரஸீத பெற்ற வேப்பம்பட்டி இசக்கியம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் ஆரவாரம் இன்றி மஞ்சள் தாலி கயிறு கட்டி திருமணம் நடைபெற்றது.
தங்களின் காதலை ஏற்றுக்கொண்ட தினேஷின் தயார் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, உடனடியாக அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…