இந்தியாவில் கொரோனாவுக்கு புதிதாக 25 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,323 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…