தனியார் மருத்துவக்கல்ல்லூரிகள் நன்கொடை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என உச்சநீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகள் நன்கொடை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்[ஆன வழகு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சீரமைப்பது தொடர்பாக ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் தலைமையில் அமைத்த குழுவின் பரிந்துரைகளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
மேலும் தனியார் கல்லூரிகள் ரொக்கமாக கட்டணம் வசூலிக்க தடை விதித்தும் உத்தரவிட்டனர்.கூடுதல் கட்டண வசூலை தடுக்க, பிரத்யேகமாக இணையதள பக்கம் ஒன்றை உருவாக்க உத்தரவிட்ட அவர்கள், அதில் தனியார் கல்லூரி கட்டண விவரங்களை பதிவேற்ற உத்தரவிட்டுள்ளனர். மாணவர்கள் தங்களது கட்டண புகார்களை அந்த இணையதளங்களில் தெரிவிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…