நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்தும், அவ்வப்போது உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்றைய 2124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,628 பேருக்கு தொற்று காண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,44,820 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2167 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒரே நாளில் 18 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 13,13,687 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 192.82 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…