பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கோமாளிகள் தினம் களைகட்டியுள்ளது.
பெருவின் புகழ்பெற்ற மறைந்த கோமாளி ஜோஸ் அல்வாரெஸ் வெலஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1987 ஆம் ஆண்டு முதல் பெரு நாட்டினர் மே-26ம் தேதி கோமாளிகள் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இன்று நடைபெற்ற கோமாளிகள் தினத்தில் , ஏராளமானவர்கள், முகங்களில் வண்ண சாயங்களை பூசிக்கொண்டும், தலையில் கோமாளி போன்ற விக்குகளை அணிந்து, தெருக்களில் புண்ணகையுடன் நடந்து சென்றனர்.
"டோனி பெரெஜில்" என்ற பெயரில், 1980களில் பெரு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கோமாளி வேடம் அணிந்து மகிழ்ச்சியைப் பரப்பிய வெலஸ், இறுதியில் தனது கடைசி நாட்களை தனியாகவும் படுத்த படுக்கையாகவும் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…